Sunday, 30 September 2012

"குரு வணக்கம்" -10

பாடல்:
"வச்சிரத்திற்   கோர்பழுது  வாய்க்கு  மாயினும்
 வல்லுடம்புக் கொருகுறை வாய்த்தி டாது 
 மெச்சுகட முள்ளவெங்கள் வேதகுருவின்
 மெல்லடி துதித்துநின் றாடாய் பாம்பே".

பொருள்:
என் வாழ்விற்கு வழிகாட்டும் ஆசானே குருவே மிகவும் 
பலம்  வாய்ந்தது என உலகமாந்தர்களால் கூறப்படும்
வஜ்ஜிரம் எனப்படும் பொருள் கூட பலம்  இழந்து
விடக்கூடும். ஆனால் ஞானமும், தவமும், சித்தும்,
உண்மையையும், சத்தியத்தையும் உலகமாந்தர்க்கு
தெளிவாக காட்டி வாழும் வழியினை ஒவ்வொரு
மாந்தருக்கும் உரைத்த என் குருவான சித்தரே தங்கள்
திருவடியினை பற்றி வணங்கி உங்கள் மென்மையான
பாதங்களை பணிந்து வாழும் எனதுசரீரத்திற்கு எந்த
பழுதும் வராமல் காத்து அருளும்படி வணங்குகின்றேன்.

      

No comments:

Post a Comment