Thursday, 25 October 2012

சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு

  ஆன்மீகம் என்றால் என்ன ?  


           இன்றைய  மக்கள்  இடையே  ஆன்மீகம்  என்பது கடவுள் வழிபாடு          செய்வதே ஆன்மீகம், என்று கூறப்படுகின்றது. ஆனால் தமிழ் சித்தர்கள் தாங்கள் கூறிய  சித்தாந்த நெறிப்படி "ஆன்மீகம்"  என்பதற்கு மிக தெளிவாக கூறியுள்ள  கருத்துகளை பற்றி அறிவோம்.
   
           ஆன்மா+அகம் என்பதே ஆன்மீகம் எனப்படும். ஒவ்வொரு மனிதனும், தன் அகத்தின் உள்ளே மறைந்து செயல்படும் ஆன்மாவை அறிதலே
ஆன்மீகம், அல்லது தன்னையறிதல், ஞான நிலையை அடைவது என தெளிவாக கூறி உள்ளார்கள்.

            இன்றைய மக்கள்  இடையே ஆன்மீகம் என்பது  கோயில்,குளம்,  தேர், திருவிழா, பூஜை, மந்திரம், ஹோமம், யாகம் போன்றவற்றை  செய்வது, கடவுள் சம்பந்தமான புராண, இதிகாச கதைகளை படிப்பது, மந்திர உபன்யாசம் கேட்பது, யாராவது ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் கூறும் ஒரு வாசகத்தை பாராயணம் செய்வது, போன்று இன்னும்  பலவித  சடங்கு, சம்பிராதய செயல்களை செய்து கொண்டு, இதனை ஆன்மீகம் என்று கூறிக் கொள்கிறார்கள்.

            இன்னும் சில மக்கள் ஜோதிடம் என்ற பெயரிலும், அருள்வாக்கு என்றும், சித்தர்வாக்கு, ரிஷிகள் வாக்கு எனக்  கூறிக் கொண்டு திரியும்  நபர்கள் பேச்சைக் கேட்டு பரிகாரம், விரதம், புண்ணிய யாத்திரை செய்து இதனை ஆன்மமீகம் என்று கூறி கொள்கின்றார்கள். இந்த ஆன்மீகம் பணம் படைத்தவர்களுக்கு ஒரு வகை, பணம்  இல்லாதவர்களுக்கு ஒரு வகை,    ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வகை, ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வகை  என பல பிரிவுகளை கொண்டு மக்களிடையே காணப்படுகின்றது.


     இந்த ஆன்மீகம் பல வகைகளாக உள்ளன அவை :
 
         1. ஆடம்பர ஆன்மீகம்
         2. அலங்கார ஆன்மீகம்
         3. அலங்கோல ஆன்மீகம்
         4. அமங்கல ஆன்மீகம்
         5. அவலட்சண ஆன்மீகம்

    என இது போன்று இன்னும் பல வகைகள் உண்டு.



                                                                                                                             தொடரும் .....

Thursday, 4 October 2012

"குரு வணக்கம் "-11

பாடல் :-

ஆயிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்
அண்டம்  எல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன்
காயமில்லா  தோங்கி வளர்காரண  சித்தன்
கண்ணொலி  யாயினானென்  றாடாய்  பாம்பே

பொருள் :-

என் குருவே சகஸ்ராகாரம் என்ற உச்சியில் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை  பூவின் மேல் அமர்ந்துள்ள குரு சித்தரே இந்த அகிலம்  எங்கும் நவகோள்கள்,பதினான்கு லோகம் எனப்படும் அண்டம் அனைத்திலும் நிறைந்து இருப்பவரே அற்புதங்கள் புரிந்து உலக உயிர்களை பசி,பிணி,மூப்பு சாக்காடு என்பவைகளில் இருந்து காப்பவரே,ஊழ்வினை,வம்சாவழிபாவ,சாப, தோஷங்களில் இருந்து விடுபட வழிகாட்டுபவரே, சரீரம்  இல்லாமல் ஓங்கி சூஷ்ம  சரீரம்  கொண்டு விண்ணிற்கும்,மண்ணிற்கும்  வியாபித்து ஜீவராசிகளின் பிறப்பிற்கு உண்டான காரணத்தையும்,அவைகள் வாழ்வில் அடையும் அனுபவிக்கும் காரியங்களையும் வெளிபடுத்துபவரே என் கண்ணில் ஒளியாய் இருந்து ஞான பார்வை தந்து வழி நடுத்துபவரே குருவே சரணம் சரணம் சரணம்  --- (பாம்பாட்டி சித்தர்)