Tuesday, 4 September 2012

"குரு வணக்கம்" - 8

 பாடல் :
"அட்டதிக்கும் அண்ட வெளியான விடமும்
 அடக்கிய குளிகையோ டாடி விரைவாய் 
 வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் 
 மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே".
பொருள்: 
குருவே உங்கள் சக்தியினால்  நீங்கள் உருவாக்கிய 
ஒரு மூலிகை குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு
எட்டு திசைகளைஉடைய இந்த பூமண்டலத்தையும்,
அதற்கும் மேற்பட்ட ஆகாயத்தையும் , ஒரு நொடிப் 
பொழுதில்  சுற்றிவரும் வல்லமையும் , சக்தியும் 
பெற்ற என் ஞானகுருவே! 
உங்கள் மலர் பாதங்களே தஞ்சம் என்று பணிந்து 
வணங்குகின்றேன்.     

No comments:

Post a Comment