Monday, 27 August 2012

"சித்தர் காப்பு"

"முக்தி கொண்டமோட்சமது மவுன  தீட்சை 
முனையறிந்து  செல்லுதற்கு வாலை காப்பு ; 
வெத்தி  கொண்ட நந்தீசர் பாதங்காப்பு ; 
வேதாந்தம் மூவாயிரம்  திருமூலர் பாதங்காப்பு ; 
அட்ட மா சித்திக்கும் அகத்தியன் பாதங்காப்பு ; 
அன்பே உருவாக்கும் அகப்பேய் பாதங்காப்பு ; 
பரம கயிலாய  குரு போகர் பாதங்காப்பு ; 
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங்காப்பு;
சூழி முனை சூட்சும குரு சுந்தரானந்தர்  பாதங்காப்பு ;
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர்  பாதங்காப்பு ;
வரும் வாழ்நாள் சிறந்திட வான்மீகர்  பாதங்காப்பு ;
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர்  பாதங்காப்பு ;
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனி
கமலர்  பாதங்காப்பு ;
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார்  பாதங்காப்பு ;
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி  பாதங்காப்பு ;
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி  பாதங்காப்பு ;
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி  பாதங்காப்பு ;
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர்  பாதங்காப்பு ;
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர்  பாதங்காப்பு ;
கொல் குணம் போக்கும் கோரக்கர்  பாதங்காப்பு ;
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர்  பாதங்காப்பு ;
தேரா மருத்துவம் தெரிந்து உரைத்திட்ட தேரையர்  பாதங்காப்பு ;
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர்  பாதங்காப்பு;
போகத்தை துறந்திட புகழ்ஞானம்தந்த புண்ணாக்கீசர்பாதங்காப்பு;
நல்ஞானஜோதியைநலமாய்உரைத்திட்ட நற்குதம்பைபாதங்காப்பு;
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங்காப்பு; 
பூஜா ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங்காப்பு; 
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங்காப்பு; 
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங்காப்பு;

காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் ,  சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் ,  
பதஞ்சலியார்  கூர்மையுள்ள இடைக்காடர் , சண்டிகேசர் 
வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி 
காப்புதானே". 

1 comment:

  1. ஓம் சிவசிவ ஓம்.
    நன்றி! அருமையான சித்தர் காப்பு. நீங்கள்தான் இந்த முழுமையான சித்தர் காப்பை தந்து இருக்கிறீர்கள். தங்கள் முயற்ச்சி வெற்றி அடையட்டும்.....

    ஓம் அகத்தீசாய நம!

    ReplyDelete