Friday, 31 August 2012

"குரு வணக்கம்" - 4

பாடல் :
"உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை
 உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
 கள்ளமனந் தன்னைத் தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
 களித்துக்க ளித்து நின்றாடாய் பாம்பே".

பொருள் :
பூவுலகில் பிறந்த மனிதர்கள் உண்மை ஞானத்தையும்
தங்கள் பிறப்பின் ரகசியத்தையும் தன் விதி அமைப்பு
அதனால் உண்டாகும் வாழ்க்கை நிலை , தன்  வாழ்வில்
அடையும் நன்மை , தீமைகள் இவைகள் எதனால்
உண்டாகின்றது. அதற்கு உண்மையான மூலகாரணம் என்ன ?
என இது போன்று மறைக்கப்பட்டுள்ள மூல ரகசியத்தை
உள்ளங்கையில் உள்ள பழம் "பளிச்" என்று நம் கண்ணிற்கு
தெரிவது போல உண்மை விளக்கத்தினை நன்கு புரியும்படி
தெளிவாக கூறி உலக மக்களுக்கு மன மாயையை , போலியான
உண்மைக்கு மாறான கருத்து நம்பிக்கைகளை மாற்றி,
ஞான நிலையை உலக மக்களுக்கு உப தேசித்து அருள் புரிந்து
வரும் உண்மை குருவே!  உன்னை வணங்குகின்றேன்.

மனதில் கள்ளம் , கபடு , சூது , அவநம்பிக்கை ,போட்டி ,பொறாமை ,
ஆணவம் , மாயை போன்ற தீய குணங்களை நீக்கி , சித்தர்கள் ,
ஞானி , மகான்களாகிய உங்களை பரிபூரணமாக நம்பி ,
உங்கள் வழிகாட்டுதளை ஏற்று வாழ்ந்து வருகின்றவர்கள்
வாழ்வை, அவர் வாழ்க்கையை உயர்வாக அமைத்து தருபவரே,
உங்கள் பாதங்களை பணிந்து வணங்குகின்றேன்.

No comments:

Post a Comment