பாடல் :
"சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்றவெங்கள் சற்குருவினைப்
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து நின்றாடாய் பாம்பே".
பொருள் :
குருவே! என் உடல் பொருள் ஆவி இவை மூன்றினையும் தங்கள்
திருவடியில் முழுமனதுடன் ஆத்மார்தமாக சமர்ப்பணம்
செய்கின்றேன் . இவைகளை மனமுவந்து தத்தமாக
ஏற்றுக்கொண்டு அருள்புரியும் குருவே , உங்களை என்
மனம் , வாக்கு சரீரத்தால் உங்கள் பாதங்களை போற்றி
வணங்குகின்றேன் .
No comments:
Post a Comment