Tuesday, 28 August 2012

"குரு வணக்கம்" - 1

பாடல் :
"சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே 
 தானம் வாங்கி நின்றவெங்கள்  சற்குருவினைப் 
 போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்தப் 
 புகழ்ந்து புகழ்ந்து நின்றாடாய் பாம்பே".

பொருள் :
குருவே! என் உடல் பொருள் ஆவி இவை மூன்றினையும் தங்கள் 
திருவடியில் முழுமனதுடன் ஆத்மார்தமாக சமர்ப்பணம் 
செய்கின்றேன் . இவைகளை மனமுவந்து தத்தமாக
ஏற்றுக்கொண்டு அருள்புரியும் குருவே , உங்களை என் 
மனம் , வாக்கு சரீரத்தால் உங்கள் பாதங்களை போற்றி 
வணங்குகின்றேன் .   

No comments:

Post a Comment