Thursday, 30 August 2012

"குரு வணக்கம்" - 3

பாடல் :
"வேதப்பொருள் இன்னதென்று வேதங் கடந்த
 மெய்ப்பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்
 போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
 பூரணசற் குருதாள்கண்  டாடு  பாம்பே"

பொருள் :   
இந்த பூமியில் பிறந்து வாழும் மனிதர்கள்  நான்கு வேதங்களே
பெரிது , வேதத்தில் அனைத்தும் அடக்கம் , வேதம் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளது  என  நம்பிக் கொண்டு
மக்களிடையே சிலர் பரப்புரை செய்து கொண்டு வருகின்றார்கள் .
காலம் காலமாக மக்களும் இதை நம்பிக்கொண்டு வருகின்றார்கள் .
இந்த நான்கு வேதங்களின் சூட்சுமமான  உண்மைப் பொருளை
உணராமல் தவறாக புரிந்துகொண்டு சரியை , கிரியை என்ற
நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு வேதத்தின்
உண்மைகருத்துகளை கூறி விளங்கவைப்பவரே .

இந்த நான்கு வேதங்களும் கூறிடாத , அளவிட்டு கூற முடியாத , வேதங்களாலும்  , வேதத்தை எழுதியவர்களும் அறிந்து விளக்க
முடியாத நான்கு வேதங்களுக்கும்  அப்பாற்பட்டு வியாபித்துள்ள
உலக சீவராசிகளின் பிறப்பு , படைப்பு , வாழ்க்கை , விதிஅமைப்பு
இவைகளின் மூலத்தையும் வேதத்திற் அப்பாற்பட்ட  சூட்சுமமான  உண்மைகளையும் , பாமரமக்களும் உணரும் படியாக போதித்து ,
உலகமக்கள் உண்மையான ஞானம் , முக்தி அடைய வழி காட்டிய
பூரண ஞான குருவின் திருவடியை வணங்குகின்றேன் .

No comments:

Post a Comment