தொடர்ச்சி ...
இன்னும் ஒரு சிலர் யோககலை கற்று தருதல் , ஞான உபதேசம் செய்தல், தியானம் கற்பித்தல், வாழும் கலை உபதேசம் தருதல், என்று உடற்பயிற்சி நிலையத்தை உலகமெல்லாம் நடத்தி, மக்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் குருமார்கள் ஒரு பக்கம், இன்னும் சில தனி நபர்கள் ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக மாநாடு, என கடவுள் பெயரை, நவக்கிரகங்கள் பெயரை கூறி உலக நன்மைக்காக பூசை, யாகம், ஹோமம், என்று கூறி பணம் பறித்தல், சிலர் அருள்வாக்கு, அன்னதானம் அறக்கட்டளை, கல்விதானம் என்ற பெயரில் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் செய்து மக்களிடம் பணம், பொருள் வசூல் செய்து ஏமாற்றுதல் போன்ற செயல்களை செய்கின்றனர்.
இது போன்ற போலி குருமார்களை பின்பற்றும் சீடர்களும், மக்களும், தன் குருமார்களுக்கு விழாக்கள் எடுத்தல், விழாவில் மலர்பாதை, மலர்கீரிடம், சிவப்பு கம்பள மரியாதை, அலங்கார மேடை, சிம்மாசனம், என செய்து அலங்காரமாக, ஆடம்பரமாக தங்கள் ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இதனை செய்து முடிக்க வரவேற்பு குழு, வசூல் செய்யும் குழு, விருந்து குழு, விழாமேடை பொறுப்பு குழு, தொலைகாட்சி, பத்திரிக்கை, சுவரொட்டி விளம்பர குழு என அமைத்துக் கொண்டு, ஏமாறும் பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்து, அதில் ஆயிரக் கணக்கில் செலவு செய்து, நடத்தும் இந்த ஆடம்பர ஆன்மீக செயல்கள், துளி கூட ஆன்மீகம் சம்பந்தப்பட்டது அல்ல. இதனை ஒரு பொழுது போக்கு விழா என்று கூறலாம். இந்த போலி குருமார்கள் மக்கள் தங்களை மறந்துவிடாமல் இருக்க யாத்திரை என்ற பெயரில் தேசம் முழுவதும் சுற்றிக் கொண்டு பணம், பொருள் என மக்களிடம் வசூல் செய்து கொண்டு இருப்பார்கள். இந்த ஆன்மமீக வியாபாரம் நடத்தும் ஆன்மீக வியாபாரிகள்.
தொடரும் ....
இன்னும் ஒரு சிலர் யோககலை கற்று தருதல் , ஞான உபதேசம் செய்தல், தியானம் கற்பித்தல், வாழும் கலை உபதேசம் தருதல், என்று உடற்பயிற்சி நிலையத்தை உலகமெல்லாம் நடத்தி, மக்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் குருமார்கள் ஒரு பக்கம், இன்னும் சில தனி நபர்கள் ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக மாநாடு, என கடவுள் பெயரை, நவக்கிரகங்கள் பெயரை கூறி உலக நன்மைக்காக பூசை, யாகம், ஹோமம், என்று கூறி பணம் பறித்தல், சிலர் அருள்வாக்கு, அன்னதானம் அறக்கட்டளை, கல்விதானம் என்ற பெயரில் ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் செய்து மக்களிடம் பணம், பொருள் வசூல் செய்து ஏமாற்றுதல் போன்ற செயல்களை செய்கின்றனர்.
இது போன்ற போலி குருமார்களை பின்பற்றும் சீடர்களும், மக்களும், தன் குருமார்களுக்கு விழாக்கள் எடுத்தல், விழாவில் மலர்பாதை, மலர்கீரிடம், சிவப்பு கம்பள மரியாதை, அலங்கார மேடை, சிம்மாசனம், என செய்து அலங்காரமாக, ஆடம்பரமாக தங்கள் ஆன்மீக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இதனை செய்து முடிக்க வரவேற்பு குழு, வசூல் செய்யும் குழு, விருந்து குழு, விழாமேடை பொறுப்பு குழு, தொலைகாட்சி, பத்திரிக்கை, சுவரொட்டி விளம்பர குழு என அமைத்துக் கொண்டு, ஏமாறும் பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்து, அதில் ஆயிரக் கணக்கில் செலவு செய்து, நடத்தும் இந்த ஆடம்பர ஆன்மீக செயல்கள், துளி கூட ஆன்மீகம் சம்பந்தப்பட்டது அல்ல. இதனை ஒரு பொழுது போக்கு விழா என்று கூறலாம். இந்த போலி குருமார்கள் மக்கள் தங்களை மறந்துவிடாமல் இருக்க யாத்திரை என்ற பெயரில் தேசம் முழுவதும் சுற்றிக் கொண்டு பணம், பொருள் என மக்களிடம் வசூல் செய்து கொண்டு இருப்பார்கள். இந்த ஆன்மமீக வியாபாரம் நடத்தும் ஆன்மீக வியாபாரிகள்.
தொடரும் ....
No comments:
Post a Comment